ஸ்ரீநகர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் (90 தொகுதிகள்) 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 2 கட்ட வாக்குப்பதிவு (50 தொகுதிகளுக்கு) நிறைவுபெற்ற நிலையில், கடைசி கட்ட வாக்குப்பதிவு (40 தொகுதிகளுக்கு) அக். 1 அன்று நடைபெறுகிறது.
இந்நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஜம்மு- காஷ்மீரில் சனியன்று ஆயிரக்க ணக்கான பொதுமக்கள் கண்டனப் பேரணி நடத்தினர். பேரணியில் இஸ்ரே லுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால் மாநிலம் முழு வதும் பதற்றம் நீடித்து வரும் நிலை யில், சனியன்று முன்னாள் முதல்வ ரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலை வருமான மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்தனர்.
தோல்வி பயத்தில் உள்ள பாஜக, இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தை பயன்படுத்தி தேர்தல் ஆணையம் மூலம் ஜம்மு-காஷ்மீரில் மூன்றாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.